காதலனின் கொடூரச் செயலால் உயிரிழந்த உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை…!!!

காதலனின் கொடூரச் செயலால் உயிரிழந்த உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை...!!!

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனையான ரெபெக்கா செப்ட்டெகே தனது காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

இதனால் 33 வயதான ரெபெக்கா தனது உடலில் 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் கென்யாவில் நடந்ததாக உகாண்டா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 4 அன்று இரவு அவரது அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால் உயிரிழந்தார்.

டிக்சன் எண்டிமா மரங்காச் என்ற நபர் ரெபெக்காவின் காதலன் என்று கூறப்பட்டது.

இவர்தான் ரெபெக்கா மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 1 செப்டம்பர் அன்று ரெபேக்காவின் வீடு தாக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை ரெபேக்காவின் மகள் ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

தனது தாயை காப்பாற்ற ஓடி வந்ததாகவும் ஆனால் அந்த நபர் தன்னை உதைத்ததாகவும் அந்த பெண் கூறினார்.

ரெபேக்காவுக்கும் டிக்சனுக்கும் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

ரெபேக்கா சில வாரங்களுக்கு முன்புதான் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று ஓட்டப் பந்தயத்தில் 44வது இடத்தைப் பிடித்தார்.