சாங்கி விமான நிலையத்தில் திருட்டு வேலையில் ஈடுபட்ட பெண்ணுக்கு அபராதம்…!!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு வேலையில் ஈடுபட்ட பெண்ணுக்கு அபராதம்...!!!

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் பல்வேறு கடைகளில் பொருட்களை திருடியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அந்த பெண்ணுக்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 36 வயதான டான்யா பிரிட்ஜட் ஹியூஸ் என்பவர் சுமார் 600 வெள்ளி பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார்.

இந்த ஆண்டு மே 31 அன்று, சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 4 இல் பாலிக்கு செல்லும் விமானத்திற்காக தன்யா காத்திருந்தார்.

பின்னர் பல கடைகளுக்கு சென்று பொருட்களை திருடியுள்ளார்.

பின்னர் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டார்.

அபராதத் தொகையை தன்யா முழுமையாக செலுத்தினார்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் 3 திருட்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

மேலும் 5 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டது.

அவர் ஒவ்வொரு திருட்டு குற்றத்திற்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.