பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!!

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நான்கு பேர் பலி

அமெரிக்கா: ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு மாணவர்களும், 2 ஆசிரியர்களும் இறந்தனர்.

மேலும் 9 பேர் காயமுற்றனர். காவல் துறையின், விசாரணையின் அடிப்படையில் அதே பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும்
என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க துப்பாக்கிக்கான கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

துணை அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஹாரிஸ் இதுபோன்ற துப்பாக்கி சூடும் சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றார்.

குடியரசு கட்சி அதிபரும் இரங்கலை தெரிவித்துள்ளார்.