அட்மிரல்டி டிரைவ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

அட்மிரல்டி டிரைவ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அட்மிரல்டி டிரைவ் புளோக் 469 இல் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு
செப்டம்பர் 3 பிற்பகல் 2.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூறியது.

யீஷூன் மற்றும் உட்லண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நான்காவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் நீர் ஜெட் பம்புகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயின் வெப்பம் மற்றும் புகையானது வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் வீட்டின் வரவேற்பறை முற்றிலும் சேதம் அடைந்தது.

வீட்டின் படுக்கையறையில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடியிருப்பு பகுதியில் இருந்த சுமார் 50 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here ⬇️