தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!!

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை...!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு...!!

தென்னிந்தியாவில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் சேதமடைந்ததால் 4000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

வீடு,வாகனம் உள்ளிட்ட அன்றாட உடமைகளை இழந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களில் தவிக்கும் மக்களை மீட்பு குழுவினர் மீட்பு படகுகளை கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு இந்திய மத்திய அரசை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg