தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!!

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்...!!! பீதியில் உறைந்த மக்கள்...!!!

தைவானின் யுன்லின் மாவட்டத்தில் உள்ள டுலியூ நகர் சாலையில் 7 மீட்டர் நீளமுள்ள பள்ளம் திடீரென ஏற்பட்டது.

இதனால் வென்ஹுவா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தினுள் விழுந்தன.

நேற்றைய (ஆகஸ்ட் 31) உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் சாலையில் பெரும் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்ட இடத்தில் திடீரென 7.3 மீட்டர் நீலமும் 3.7 மீட்டர் அகலமும் 1.4 மீட்டர் ஆழம் கொண்ட பாதாளக் குழி உருவானது.

தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பள்ளம் ஏற்பட்ட நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

சாலையோரம் உள்ள கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

குண்டும் குழியுமான சாலை பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உள்ளது.

மேலும் இந்த சாலை நீண்ட நாட்களாக வலுவிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

சாலை உள்கட்டமைப்பு சோதனை செய்யப்பட்டு விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.