உஷார்…!! பெற்றோர்களின் கவனத்திற்கு…!!!

உஷார்...!! பெற்றோர்களின் கவனத்திற்கு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செங்காங் பகுதியில் உள்ள ரிவர்வேல் வணிக வளாகத்தில் ஒரு சிறுமியின் கால் மின் படிக்கட்டில் சிக்கிக்கொண்டது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 29 மாலை 4 மணியளவில் நடந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சரியான நேரத்தில் வந்ததால் சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் சிறுமிக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தக் காட்சியை நேரில் கண்ட ஒருவர் குழந்தை சத்தமாக அழவில்லை அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கடைத் தொகுதியை விட்டு வெளியேறியபோது, ​​அங்கு மீட்புப் பணியாளர்கள் கூட்டமாக இருப்பதை பார்த்ததாக கூறினார்.

பெற்றோர்கள் குழந்தையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது மிகவும் கவனமுடன் பார்த்துக் கொண்டால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

 

Follow us on : click here ⬇️