சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! கட்டுமான தொழிலாளி பலி!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! கட்டுமான தொழிலாளி பலி!!

சிங்கப்பூர் : சாங்கியில் உள்ள ஒரு வேலையிடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி அங்கிருந்த ஓர் கட்டுமான தொழிலாளி மீது மோதியது.துரதிஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் தனா மேரா கடற்கரை சாலை மற்றும் சாங்கி ஈஸ்ட் டிரைவ் சந்திப்பில் நேர்ந்தது.இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளி சீனா நாட்டைச் சேர்ந்தவர்.அவருக்கு வயது 35.Huo Hao Development நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

விபத்து நேர்ந்த இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விரைந்தது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் கட்டுமானத் தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.கவனக்குறைவான செயலால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.