சோதனைச்சாவடியில் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறிக்க முயன்ற பெண்!!

சோதனைச்சாவடியில் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறிக்க முயன்ற பெண்!!

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் அதிகாரியின் கைத்துப்பாக்கியை எடுக்க முயன்றதாக 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 27-ஆம் தேதி சூ டிங் எனும் சீனா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அந்த பெண் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட சோதனைக்காக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அதிகாரி கேள்விகள் கேட்கும் போது அவரது கைத்துப்பாக்கியை அந்த பெண் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி மதியம் சுமார் 3.40 மணியளவில் தகவல் வந்தாக சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அந்த பெண் மீது இன்று(ஆகஸ்ட் 29) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 12-ஆம் தேதி சூவின் வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

Follow us on : click here ⬇️