கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் தொடர்ந்து அதிகாலை 2.30 மணியளவில் நேர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த புதிய பள்ளம் விஜயலட்சுமி விழுந்த பள்ளத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தோன்றியுள்ளது.

அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பள்ளத்தைச் சுற்றி தடுப்புப் போடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மலேசியா அதிகாரிகள் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தின் சாலையை மூடியுள்ளனர்.

அந்த 400 மீட்டர் நீளமுள்ள சாலையில் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.