பொத்தோங் பாசிர் குடியிருப்புக்கு வெளியே தீ!! உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம்!!

பொத்தோங் பாசிர் குடியிருப்புக்கு வெளியே தீ!! உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம்!!

பொத்தோங் பாசிர் அவென்யூ 1-இல் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு வெளியே தீ விபத்து ஏற்பட்டது.

பொத்தோங் பாசிர் அவென்யூ 1, பிளாக் 107 – இல் காலை 6.45 மணியளவில் தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.

தீ விபத்து நடந்த இடத்தில் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.