35 நாடுகளுக்கு இலவச விசா!! புதிய அறிவிப்பை அறிவித்துள்ள நாடு!!

35 நாடுகளுக்கு இலவச விசா!! புதிய அறிவிப்பை அறிவித்துள்ள நாடு!!

இலங்கை பொருளாதரத்தில் நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருகின்ற வேளையில் அதை சமாளிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

சுற்றுலாத்துறை மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இதுவும் அடங்கும்.

35 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 30 நாள் இலவச விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் தேதி தொடங்கி 6 மாதங்களுக்கு இந்த முன்னோடி திட்டம் நீடிக்கும்.

கொரோனா பரவல் காலகட்டத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது.அதன் பின் 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் மோசமாக பாதித்தது.

Follow us on : click here ⬇️