ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலெடொ நகரில் விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கூர்மையான பொருளினால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது.

இந்த கொலைச் சம்பவம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை நடந்தது.

கொலைச் செய்யப்பட்ட சிறுவனுக்கு 11 வயது என BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொலைச் செய்யப்பட்ட சிறுவன் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சிறுவனைத் தாக்கி விட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக காவல்துறை கூறியது.

அந்த நபருக்கு 18 வயது இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நபரைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அதற்காக ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.