கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!!

இந்தியாவின் கொல்கத்தாவில் 31 வயது இளம் பயிற்சி மருத்துவர் அரசாங்க மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து இளம் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

தற்போது ஆர்ப்பாட்டம் வலுபெற்று தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து இந்திய மருத்துவ சங்கம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி 24 மணி நேரத்துக்கு அவசரமற்ற சேவைகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

இதன் தொடர்பாக காவல்துறை தொண்டுழீயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மேலும் அந்த மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஐந்து பேரிடம் மத்திய புலனாய்வு துறை விசாரணைநடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.