ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!!

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!!

பாரிஸில் ஒலிம்பிக் 2024 நிறைவு விழாவை வெகுவிமர்ச்சியாக கொண்டாட தயாராகி கொண்டிருந்த வேளையில் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வில் Eiffle டவர் முக்கிய பங்கை வகித்தது.

மேலாடை அணியாமல் நபர் ஒருவர் Eiffle டவர் மீது ஏறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் கோபுரத்தின் உயரத்தில் ஏறிக்கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கிருந்த மக்களை காவல்துறையினர் உள்ளுர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் வெளியேற்றினர்.

இச்சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அவர் கோபுரத்தில் மேலாடை இல்லாமல் ஏறுவதைக் காணலாம். மேலும் ஒலிம்பிக் வளையங்களுக்கு ஏறிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இச்சம்பவம் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.