சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!!

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!!

மலேசியாவின் பேரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அதிகாரி ஒருவர் ட்ரோன் ஒன்று கூரையின் மேல் இருப்பதைக் கண்டார்.

போதைப்பொருளைச் சிறைச்சாலைக்குள் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த ட்ரோனில் போதைப்பொருள் அடங்கிய பைகள் இருந்தன.

அந்த பைகளில் Crystal Methamphetamine,Heroin போதைப்பொருட்கள் இருந்தன.

இது போன்று நடப்பது இதுவே முதல்முறை.

மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.