Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை.

தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.

இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.

கடந்த 2 மாதங்களாக உடல் தகுதி பெறுவதற்காக கடுமையாக உழைத்துள்ளதாக கூறினார்.

தற்போது முழுமையாக உடல் தகுதி பெற்று விட்டதாகவும் கூறினார்.நடப்பு ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாகவும் கூறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.