கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!!

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இடைவிடாது பெய்த கன மழையினால் பழைய வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் 9 குழந்தைகள் உயிரிழந்ததாக தி இந்து இணையதளம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் அதே மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் இறந்தனர்.

அந்த செய்தி வெளியான ஒரு நாள் கழித்து இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

ஷாப்பூர் கிராமத்தில் சமய ஊர்வலம் நடந்துகொண்டிருக்கிறது.

அதற்காக அந்தப் பழைய வீட்டோடு ஒட்டியிருந்த முகாம் ஒன்றில் பிள்ளைகள் கூடினர். அவர்கள் களிமண்ணால் சிலைகளைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த பிள்ளைகள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் காயம் அடைந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அந்தப் பழைய வீட்டை கனரக இயந்திரம் கொண்டு அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.