6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!!

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!!

மலேசியாவில் 6 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம்(ஜூலை)20-ஆம் தேதி 6 வயது சிறுமி காணாமல் போனார்.அச்சிறுமியை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜூலை 23-ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள நபரின் தடுப்புக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோகளை வைத்திருந்தார்.அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக அவரது தடுப்புக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக,கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் இருந்தார்.மீண்டும் அவரது தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.