ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!!

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!!

ஜொகூர் மாநிலத்தில் 75 வயதுடைய மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே உள்ள ரப்பர் மரம் ஒன்றை சீவிக் கொண்டிருந்த போது சுமார் 10 யானைகள் கூட்டமாக நுழைந்தன.

யானைகள் கூட்டம் அவரை தாக்கியதாக நம்பப்படுகிறது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

அவரது உடல் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 4) காலை சுமார் 7 மணியளவில் நேர்ந்ததாக Bernama செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் ரப்பர் தோட்டம் அருகே உள்ள குடியிருப்பாளர்.

இச்சம்பவம் குறித்து மாவட்டக் காவல்துறை, தேசிய வனவியல் பூங்கா அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் அளிக்கபட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.