இங்கிலாந்தின் சவுத்போர்ட் கொலை வழக்கில் 17 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு!!

இங்கிலாந்தின் சவுத்போர்ட் கொலை வழக்கில் 17 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு!!

இங்கிலாந்தின் சவுத்போர்ட் கொலை வழக்கில் 17 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு!!

வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

அந்த வழக்கில் ஆக்செல் முகன்வா ருடகுபனா என்ற 17 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் பாணியில் குழந்தைகளுக்கான நடன வகுப்பின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த இளைஞன் மீது 10 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.

அவர் ஆகஸ்ட் 1 லிவர்பூல் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆசைப்படுத்தப்பட்டார்.

இந்த தாக்குதலின் போது நடன வகுப்பில் இருந்த 8 குழந்தைகள் உட்பட 2 பெரியவர்கள் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை அன்று ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் ஐந்து குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அனைவரும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சவுத்போர்ட்டில் நடந்த மரணங்களுக்கு மத்திய லண்டனில் போராட்டங்கள் வெடித்தன.

எதிர்பாளர்கள் மெர்சிடைட் நகரத்தில் உள்ள மசூதிக்கு அருகில் கூடினர்.இதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.