உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான கட்டிடம்!! 11 பேரின் சடலங்கள் மீட்பு!!

உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான கட்டிடம்!! 11 பேரின் சடலங்கள் மீட்பு!!

மணிலாவில் சைனாடவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிடத்தில் உள்ள உணவகத்தில் சமைத்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல் தளத்தில் உள்ள வீடுகளில் கண்டெடுக்கப்பட்டன.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் தூங்கி கொண்டிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கட்டிடத்தில் தீ பரவிய போது மக்கள் 5-ஆம் தளத்திலிருந்து அலறி குதித்ததாக தெரிவிக்கப்பட்டது.

 தீயை அணைப்பதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனதாக நகரின் தீயணைப்புத் துறை தெரிவித்தது. 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன.