சாகசத்தை முடித்து விட்டு திரும்பி வந்த போது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

சாகசத்தை முடித்து விட்டு திரும்பி வந்த போது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் உள்ள தொங்கும் பாலத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்தது. அதில் நடந்து கொண்டிருந்த சீனா நாட்டைச் சேர்ந்த தம்பதி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர்.

உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காயம் காரணமாக மனைவி உயிரிழந்தார்.

கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கை, கால் உடைந்துள்ளதாக National Thailand வெளியிட்டுள்ளது.

அவர்கள் சுமார் 15 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்துள்ளனர். தொங்கும் பாலத்தில் இருவரும் நடந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

சீனா நாட்டைச் சேர்ந்த 44 வயதுடைய Jing Chen,தனது கணவர் 46 வயதுடைய Liu Yang ஆகிய இருவரும் Zipline சாகச நடவடிக்கை முடித்து விட்டு திரும்பி வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக Nation Thailand தெரிவித்துள்ளது.