சிங்கப்பூரில் தனது மகன் குறும்புத்தனமாக நடந்து கொள்வதால் பெல்ட்டால் பல முறை அடித்து துன்புறுத்திய தாய்!!

சிங்கப்பூரில் தனது மகன் குறும்புத்தனமாக நடந்து கொள்வதால் பெல்ட்டால் பல முறை அடித்து துன்புறுத்திய தாய்!!

சிங்கப்பூரில் தனது 6 வயது மகனை அடித்து துன்புறுத்திய தாய்க்கு 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தாய் பெல்ட்டால் 100 க்கும் அதிகமான முறை அடித்தும் குத்தியும்,உதைத்தும் ,அரைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

மேலும் அச்சிறுவனை தலைகீழாக நிற்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த சிறுவனின் உடலில் 50 க்கும் அதிகமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

தனது மகன் குறும்பு தனமாக நடந்து கொள்வதால் கண்டிப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சிறுவனை தாய் துன்புறுத்திய வீடியோ சமர்ப்பிக்கப்பட்டது.மேலும் சிறுவனை அடித்து தான் இல்லை என்றும் தனது காதலன் தான் அடித்தார் என காவல்துறையிடம் பொய் கூறியதும் தெரிவிக்கப்பட்டது .

சிறுவனின் உடலில் நிரந்தர காயங்கள் ஏற்படவில்லை; தாய் பிள்ளையை அடித்ததை நினைத்து வருந்துவதாக கூறியதையும் நீதிபதி குறிப்பிட்டார் .

மகன் குறும்புத்தனமாக நடந்து கொள்வதால் கண்டிப்பதற்காக இவ்வளவு கடுமையாக நடந்திருக்க கூடாது என்று நீதிபதி கூறினார் .