சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் இ-சிகரெட் புகைக்கும் பழக்கம்!! பிடிபட்ட 700 மாணவர்கள்!!

சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் இ-சிகரெட் புகைக்கும் பழக்கம்!! பிடிபட்ட 700 மாணவர்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,530 பேர் இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக பிடிபட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம்(MOH)மற்றும் சுகாதார அறிவியல் அமைச்சகம்(HSA) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது முதல் காலாண்டை விட 30 சதவீதம் அதிகமானதாக உள்ளது.

சட்டவிரோதமாக இ-சிகரெட் விற்பனை செய்த 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 29) அதிகாரிகள் மத்திய வர்த்தக மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது இ-சிகரெட் பயன்படுத்தியதாக 57 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள்.

இ-சிகரெட் பயன்படுத்திய குற்றத்திற்காக அவர்களுக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மின் சிகரெட்டை பயன்படுத்தியதாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 700 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அவர்களில் 400 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதை அடுத்து ஒரு மாதத்திற்குள் அவர்களில் 50 சதவீதம் பேர் இ-சிகரெட் புகைப் பிடிக்கும் பழக்கத்தை குறைந்துள்ளதாக கூறினர்.

சுகாதார அறிவியல் அமைச்சகமானது, உள்ளூர் இ காமெர்ஸ் மற்றும் சமூக ஊடக தளங்களுடன் இணைந்து இணையதளங்களில் பட்டியலிடப்பட்ட இ-சிகரெட்டுகளின் விற்பனை மற்றும் விளம்பரங்களை தடை செய்தது .மேலும் 2000க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகள் இணைய தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg