Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை.

மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன.

போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார்.

இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா.

இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.