யீஷுனில் கொலை செய்ததாக சந்தேகப்படும் 49 வயது நபர் கைது…

சிங்கப்பூர்: யீஷுனில் கொலை செய்ததாக சந்தேகப்படும் 49 வயது மதிக்கத்தக்க நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவமானது யீஷுன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 803, 10 வது மாடியில் உள்ள வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு நேற்று காலை 8.35 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

35 வயதுடைய நபர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் நன்கு பழகியவர்கள் என்றும் இருவருக்கும் நடந்த திடீர் வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் காயப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர் இன்று (ஜூலை 28) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இச்சம்பவம் குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.