Latest Tamil News Online

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் ஜெர்மனியில் நடக்கும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்!

ஜெர்மனியில் Munich நகரில் 59-வது பாதுகாப்பு மாநாடு நடைபெறும்.

இதில் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen கலந்து கொள்கிறார்.

இந்த வருடாந்திர மாநாட்டில் தற்காப்பு அமைச்சர் 11-வது முறையாக பங்கேற்கிறார்.

பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் முக்கிய வெளியுறவு,தற்காப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen இரண்டு வட்டமேசை மாநாடுகளில் பங்கெடுப்பார்.

அவர் மற்றும் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களையும் சந்திப்பார்.

முதன் முதலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு 1963-ஆம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.