தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

கடந்த எட்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தைவானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேமி புயலால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது நாளாக தைவானில் பலத்த காற்று வீசியது.அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.

இந்த சூறாவளியினால் தான்சானியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று காஹ்சியங் துறைமுகத்தில் மூழ்கியதாக தைவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

கப்பலில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 9 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 3பேர் கடற்கரையில் ஒதுங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மீதமுள்ளவர்களைத் தேடும் பணியானது தேடுதல் மீட்பு குழுவினரால் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.