மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.

ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக கூறப்படுகிறது.

அப்துல் ஹகீம் மாணவர் அவர்களுக்கு உடந்தையாக இருந்து தூண்டி விட்டதாக மற்றவர்களுக்கு உத்தரவு அளித்ததாகவும் கூறப்பட்டது.

முன்னதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதி Hadhariah Syed Ismail அந்த 6 பேருக்கும் கட்டாய மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட Zulfarhan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 1-ஆம் தேதி 2017-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.