புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!!

புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கிய விமானம்!! பலியான 18 பேர்!! விமானி உயிர் பிழைத்த அதிசயம்!!

நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் Saurya Airlines விமானம் ஓடு பாதையில் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

விமானம் 19 பயணிகளுடன் புறப்பட்டது.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஜூலை 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்ந்தது.

தற்போது விமானிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

அடிக்கடி இது போன்ற துயரச் சம்பவங்கள் நேருவதால் விமானத்துறையில் பாதுகாப்பு குறித்த கவலை எழுகிறது.

விமானம் தவறான திசையில் புறப்பட்டதே இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.