படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

படகில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதிக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

நோவா ஸ்கோஷியாவில் இருந்து புறப்பட்டு The Azores பகுதியை நோக்கி பிரிட்டனை சேர்ந்த Sarah Packwood,கனடாவைச் சேர்ந்த Brett Clibbery தம்பதியினர் படகில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். கடந்த மாதம் 18-ஆம் தேதி அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் Theros உல்லாசப் படகில் பயணத்தை மேற்கொண்டனர்.

கனடாவில் உள்ள Sable தீவில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

நோவா ஸ்கோஷியாவில் இருந்து The Azores பகுதிக்கு செல்ல 21 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.