வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உடல் நலக்குறைவால் காலமானார்…!!

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உடல் நலக்குறைவால் காலமானார்...!!

சிங்கப்பூர்: வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நுவென் பூ த்ரோங் மறைவுக்கு சிங்கப்பூர் அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 80 வயதான திரு.த்ரோங் ஜூலை 19 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

வியட்நாம் மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் திரு.த்ரோங் என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் பாராட்டினார்.

அவர் வியட்நாம் அதிபருக்கு இரங்கல் கடிதம் அனுப்பினார். திரு.தர்மன், திரு.த்ரோங் ஊழல் ஒழிப்பில் கவனம் செலுத்துவது அவரது தலைமையின் தனிச்சிறப்பு என்று கூறினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், வியட்நாம் பிரதமர் பாம் மின்
சின்னுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டதில் திரு.த்ரோங்கின் பங்களிப்பு முக்கியமானது என்று பிரதமர் பாராட்டினார்.

மேலும் அக்கடிதத்தில் சிங்கப்பூரின் நெருங்கிய நண்பராக கருதப்படும் திரு.த்ரோங் 2012 இல் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார். அது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உதவியது என்று திரு.வோங் குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திரு த்ரோங்கின் பதவிக்காலத்தில் வியட்நாமில் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள் ஏராளம் என புகழ்ந்து பேசி உள்ளார்.

Follow us on : click here 👇👇

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg