இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!!

இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!!

சிங்கப்பூர்: பெட்ரா பிரான்காவிலிருந்து வடகிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவில் கப்பல்கள் தீ பிடித்ததில் 36 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த தீ சம்பவத்தில் 2 சிப்பந்திகள் பாதிக்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிங்கப்பூர் ஆகாயப்படையின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனர்.

ஜூலை 19-ஆம் தேதி காலை சுமார் 6.15 மணியளவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.

சிங்கப்பூர் கப்பலான Hafnia Nile கப்பலும் மற்றொரு கப்பலும் மோதின.இதனால் கப்பல்களில் தீப்பற்றியது.

இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 62 சிப்பந்திகள் இருந்ததாக கூறப்படுகிறது.அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு கப்பல் மத்திய ஆப்பிரிக்காவின் São Tome,Prince நாட்டைச் சேர்ந்தது.