என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் சிறுவனை குத்திய நபர்!!

என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் சிறுவனை குத்திய நபர்!!

சிங்கப்பூர்: ஜூலை 18 ஆம் தேதி மாக் வை ஒன்(53) சிங்கப்பூரருக்கு ஐந்து வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாடகைக் கார் ஓட்டுநராக பணிபுரியும் மாக்கும் அவரது மனைவியும் கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ஆறு வயதுடைய மகனை வகுப்பிலிருந்து அழைத்துச் செல்ல செல்லும்போது மகன் உதைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் தனது மகன் அந்தரங்க உறுப்பில் வலி இருப்பதாக கூறினான். மாக்கும் மனைவியும் ஆசிரியரிடம் சென்று என்ன நடந்தது என்று சரியாக கேட்காமல் கோபத்தில் மாக் சிறுவனை குத்தினார்.

அச்சிறுவன் தனது மகனின் அந்தரங்க உறுப்புகளை உதைத்ததாக நினைத்து சிறுவனின் முகத்தில் மாக் குத்தினார். சிறுவன் பின்னோக்கி விழுந்தான்.
அவன் பாட்டியின் கையைப் பிடித்து இருந்ததால் தலை அடிபடவில்லை.

என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் தானாக முன்வந்து சிறுவனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மருத்துவ செலவிற்காக 440 வெள்ளி பாதிக்கப்பட்டவருக்கு மாக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

ஐந்து வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.