வரும் 28-ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் இஸ்தானா!!

வரும் 28-ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் இஸ்தானா!!

சிங்கப்பூர் : இஸ்தானா தேசிய தினத்தை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்படும் என அறிவிப்பு.

காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இஸ்தானாவை பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும் அங்கு நேரடி நிகழ்ச்சிகள், செயல்பாடுகளைக் காணலாம்.இஸ்தானாவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

அதோடு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளலாம்.

நாகோமி கலை என்பது ஒருவரின் விரல்கள் மற்றும் பச்டேல் பொடியைக் கொண்டு ஓவியம் வரைவது ஆகும்.

அங்கு உணவு கடைகள், உணவு டிரக் மற்றும் நினைவுப் பொருட்களும் இருக்கும்.

பல்லின நடனப் படைப்பு நிகழ்ச்சிகளை தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்,உள்ளூர் இளம் கலைஞர்கள் வழங்குவார்கள்.