Singapore Job News Online

1948-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த 85,000 சிங்கப்பூரர்களுக்கு இயல்பாகவே மாதாந்திர வழங்குத்தொகை!

வரும் ஜூன் மாதம் முதல் மூத்த சிங்கப்பூரர்களில் 1948-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த சுமார் 85000 பேருக்கு இயல்பாகவே மாதாந்திர வழங்குத்தொகையைப் பெற தொடங்குவர்.

இதற்கு அடுத்து வரும் பிறந்த மாதத்திலிருந்து அவர்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வழங்குத்தொகை போடப்படும்.

இதுகுறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படும்.

இதனை மத்திய சேமநிதிக் கழகம் அறிவித்தது.

பலர் 65-வயதை எட்டிய சேமநிதி உறுப்பினர்களுக்கு வழங்குத் தொகையைத் தர தொடங்க வேண்டும் என்று கழக்கத்திடம் தெரிவிக்க தவறுவது உண்டு.

இதனால் தீர்வுக்காணும் நோக்கில் 2018-ஆம் ஆண்டில் புதிய மாற்றத்தை அறிமுகம் படுத்தப்பட்டது.

அதையடுத்து 1948-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்த மூத்தோர்கள் இயல்பாகவே வழங்குத் தொகையைப் பெற ஆரம்பிப்பர்.