வீட்டிற்கு வெளியே நீராவி குளியலறை அமைத்த உரிமையாளர் மீது நடவடிக்கை!!

வீட்டிற்கு வெளியே நீராவி குளியலறை அமைத்த உரிமையாளர் மீது நடவடிக்கை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக சிராங்கூன் சென்ட்ரல் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிற்கு வெளியே நீராவி குளியலறையை கட்டிய உரிமையாளர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

பிளாக் 427ல் இருந்த அந்த குளியல் இடம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஜூலை 10 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே நீராவி குளியலறை இருப்பதைப் பற்றி பலர் கருத்து தெரிவித்ததாகக் கூறியது.

இது குறித்து CNA மறுநாள் ஜூலை 11 இல் அங்கு வசிப்பவர்களிடம்  பேசியதாக தெரிவித்தது.

கிளப் ஹவுஸுக்கு வெளியே உள்ள நீராவி குளியலறை தங்களுக்கு எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் கூறினர்.

சோதனையில் நீராவி குளியல் அகற்றப்பட்டது. இருப்பினும், வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட சில பொருட்கள் தீ பாதுகாப்பு விதி மீறல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டன.

மேலும் இது போன்ற கடுமையான விதி மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் பொருட்களை அகற்றிய பிறகு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அபாயகரமான பொருட்களை அகற்ற தவறும் பட்சத்தில் $10,000 வரை அபராதமோ அல்லது ஆறு மாதங்கள் வரை தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.