சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரும் அமெரிக்காவும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.

ஆஸ்பென் பாதுகாப்பு மாநாட்டிற்காக அமெரிக்கா சென்றுள்ள சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார்.அப்போது இது குறித்து பேசப்பட்டது.

தலைவர்களின் சந்திப்பானது அமெரிக்க தற்காப்பு அமைச்சக கட்டிடத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர்-அமெரிக்க தற்காப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டது

அமெரிக்காவில் இராணுவப் பயிற்சிகளை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் பயிற்சி மேற்கொள்ள ஆதரவுக்காக டாக்டர் இங் நன்றி கூறினார்.

இது சிங்கப்பூர் வீரர்களுக்கு அமெரிக்க விமானப்படைத் தளங்களில் பயிற்சி பெறவும், F-16 மற்றும் F-15 ரகப் போர் விமானங்களை பழகி பார்ப்பதற்கும் வாய்ப்பளித்தது.