நாட்டையே உலுக்கிய சம்பவம்!! பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர்!! குப்பை கிடங்கில் சடலங்கள்!!

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர்!! குப்பை கிடங்கில் சடலங்கள்!!

கென்யா நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.நாட்டையே உலுக்கி பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நைரோபியாவில் 33 வயதுடைய நபர் பெண்களைக் குறி வைத்து தொடர் கொலைகளை நடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொலை செய்ததாக காவல்துறையிடம் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.

ஜூலை 15-ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

முகுரு பகுதியில் உள்ள குவாரிக்கு அருகே 33 வயதுடைய காலின்ஸ் ஜீமைசி வசித்து வந்தார்.குறிப்பாக பெண்களை மட்டும் குறி வைத்து அவர் கொலைகளைச் செய்து வந்துள்ளார். கொலைச் செய்து சடலங்களை அருகே உள்ள குப்பைக் கிடங்கில் வீசி வந்துள்ளார்.

முதலில் தனது மனைவியை கொன்றதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.அந்த நபர் இதுவரை 42 பெண்களை கொடூரமாக கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சடலங்களை வீசியதாக கூறப்பட்ட குப்பை கிடங்கில் சோதனை நடைபெற்றது. இதுவரை 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.

சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண சிரமம் ஏற்படும் என்று கூறினார்.

மேலும் அந்த நபர் தொடர் கொலையை தனது மனைவியை கொன்றதிலிருந்து ஆரம்பித்து 2022 வரை அவ்வாறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலைச் செய்த பிறகு சடலங்களை துண்டாக்கி நைலான் சாக்குகளில் கட்டி குப்பையில் வீசியதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் கொலை செய்ய பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தி,கையுறைகள், செலோடேப்பின் சுருள்கள், பல செல்போன்கள் மற்றும் ஒரு டஜன் நைலான் சாக்குகள் ஆகியவைகளைப் பறிமுதல் செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

அந்த நபர் கைது செய்யப்படும் சமயத்தில் தனக்கும் தொடர் கொலைகளுக்கும் சமந்தம் இல்லாதது போல் டிவியில் கால்பந்து போட்டியை பார்த்தாக கூறப்படுகிறது.

குப்பை கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்களைக் காண ஊர் மக்கள் திரண்டிருந்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.