அதிர்ச்சி…! பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணம்…

அதிர்ச்சி...! பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணம்...

பிரான்சில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தநாள் விழாவில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவார்.

மூவரையும் சுட்டுக் கொன்ற பின்னர், சந்தேக நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த 20 வயதுடைய இளைஞரும், அவரது தந்தையும், கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் எதற்காக, ஏன் நடத்தப்பட்டது என்பதை அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் அந்த நபர் வீதிகளில் சென்ற வாகனங்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த 15 பேரை மனநல மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபருக்கு ஐம்பது வயது இருக்கும் என கணிக்கப்படுகிறது.