நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பேருந்துகள்!! மாயமான 60 க்கும் மேற்பட்டோர்!!

நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பேருந்துகள்!! மாயமான 60 க்கும் மேற்பட்டோர்!!

நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

இந்த சம்பவம் சிட்வான் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தால் 60 க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தகவலை மாவட்ட அதிகாரிகள் AFP செய்தியிடம் கூறினர்.

மேலும் பேருந்துகள் பயணித்த பாதைகளில் இன்னும் சிலர் ஏறியிருக்கலாம் என்று கூறுகின்றனர். அதனால் எத்தனை பேர் பேருந்துகளில் இருந்தனர், எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை யாரும் மீட்கப்படவில்லை.

இச்சம்பவத்தை அறிந்த நேபாளப் பிரதமர் Pushpa Kamal Dahal தனது வருத்ததை தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் மீட்பு படையினர் ஆகியோர் உடனடியாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் காவல்துறை கூறியது.