கார்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது!!

கார்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது!!

சிங்கப்பூர்: ஹுகாங்கில் கிம் சுவான் டிரைவில் உள்ள ஒரு கார் ஒர்க் ஷாப் வெளியில் கார் நிறுத்தப்பட்டிருந்ததை 16 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் காரின் உள்ளே சாவியை விட்டு திறந்ததாக விசாரணையின் போது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறைக்கு ஜூலை 9-ஆம் தேதி காலை 11 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அங்கிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த இரண்டு இளைஞர்களையும் அடையாளம் கண்டனர்.

அவர்கள் இருவரையும் ஜூலை 10-ஆம் தேதி காவல்துறை கைது செய்தது.

மேலும் இதே கார் ஒர்க் ஷாப்பில் கார்கள் திருடப்பட்ட சம்பவங்களில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜூலை 12-ஆம் தேதி(இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சாவியை வாகனங்களிலேயே விட்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை காவல்துறை அறிவுறுத்தியது.