இந்தோனேஷியாவில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தங்க சுரங்கத்தில் ஜூலை 6-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.இச்சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 35 பேர் காணவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பொலாங்கோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமை கடுமையாக மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 66 பேர் உயிர் தப்பினர்.

மேலும் 35 பேர் காணவில்லை என்று மீட்பு பணி அதிகாரி ஐடா பாகஸ் AFP இடம் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணிகளுக்காக சுமார் 270 க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரி கூறினார்.

அங்கு பல பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை.அதனால் மீட்பு பணியாளர்கள் நடந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.