பொதுச் சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!!

பொதுச் சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் தகுதிபெறும் அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி அனுகூலமாக வழங்கப்பட உள்ளதாக என்று பொதுப்பணித்துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

‘FlexiGrow’ திட்டத்தின் கீழ் அது வழங்கப்படும் என்றார்.

இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும்.

அடுத்த ஆண்டு சுமார் 150,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ,வெளிநோயாளிகள் -சிகிச்சைக் கட்டணத்தில் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் தனியார் மருந்தகங்களுக்கு ஒவ்வொரு வருகைக்கும் 50 வெள்ளி வரை மருத்துவக் கட்டண தள்ளுபடிகளைப் பெறலாம்.

ஆண்டுதோறும் பல் சிகிச்சைக்கு 250 வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து சலுகைகளும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக திரு சான் கூறினார்.