சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 59 வயது லீ யுஹுவா!!

சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 59 வயது லீ யுஹுவா!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த லீ யுஹுவா என்பவர் முட்டையை உடைக்காமல் வரிசையாக தரைக் கற்களை மட்டும் உடைத்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தனது லட்சியத்திற்கு வயது ஒரு தடை இல்லை என நிரூபித்து காட்டினார்.59 வயது மதிக்கத்தக்க லீ தற்காப்புக் கலையில் சிறந்து விளங்குபவர்.வயதானாலும் தன் குறிக்கோளை விடாது
தொடர்ந்து வெற்றியும் பெற்றார். அவரின் இந்த சாதனையானது அனைவருக்கும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது.

கடந்த ஆண்டு (2023) 30 வினாடிகளில் 69 தரைக்கற்களை உடைத்து சாதனை படைத்தார்.

தற்போது 30 விநாடிகளில் 85 தரைக்கற்களை அடித்து நொறுக்கினார். அவரின் முந்தைய ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு நாற்காலியிலும் ஒரு முக்கோணப் பொருள் வைத்து அதன் மீது ஒரு முட்டை வைக்கப்பட்டது.

முட்டையின் மேல் தரையில் கல் வைக்கப்பட்டது லீ சாமர்த்தியமாக முட்டையை உடைக்காமல், தரைக் கல்லை மட்டும் அடித்து நொறுக்கினார்.

இவரின் அசாத்திய திறமையை கண்ட அனைவரும் வியந்தனர்.

சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லீயின் சாதனையை அங்கீகரித்து அவருக்கு சான்றிதழை வழங்கியது.