Singapore Job News Online

GCE A தேர்வு முடிவுகள் வெளியீடும் தினத்தைச் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு கழகம் அறிவிப்பு!

பிப்ரவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொதுக் கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிகள் வெளியிடப்படும்.

மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பிற்பகல் 2.30 மணியளவில் பெற்றுக்கொள்ளலாம்.இதனை கல்வி அமைச்சகமும், சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்தன.

கடந்த 2022-ஆம் ஆண்டு கிருமி தொற்று பரவல் காரணமாக மாணவர்களுடன் பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு வகிப்போர் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், இந்த முறை அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு வகிப்போர்களுடன் செல்லலாம்.

உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகத்தின் இணையத் தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான தினத்தன்று 3.15 மணியிலிருந்து பார்த்துக் கொள்ளலாம்.