சிங்கப்பூர் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!! குற்றவாளி பிடிபட்டார்!!

சிங்கப்பூர் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!! குற்றவாளி பிடிபட்டார்!!

சிங்கப்பூர் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!! குற்றவாளி பிடிபட்டார்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆற்றில் கிளார்க் குவே அருகே ஜூன் 30 அன்று ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கரையில் இருந்து 3 மீட்டர் தொலைவில் 3 மீட்டர் ஆழத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இந்தத் தகவலை செய்தியிடம் கூறியது.

ஜூன் 30 அன்று இரவு 10.15 மணியளவில் உதவிக்கான அவசர அழைப்பு வந்ததாக அந்த அமைப்பு கூறியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளுக்கு முதலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இதையடுத்து, பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு நீருக்கடியில் தேடியபோது சடலம் கிடைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஆற்றில் தள்ளியதாக 21 வயது இளைஞன் மீது ஜூலை 2 நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அந்த இளைஞர் 33 வயதுடைய நபரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் சந்தேக நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவரிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.