ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!!

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!!

இந்தியாவில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும் மறுபக்கம் கனமழை பெய்கிறது. வட பகுதியிலும், வடகிழக்கு பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இந்த இரு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு மாநிலங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.