செந்தோசா கடலில் விழுந்த பெண் கைது!!

செந்தோசா கடலில் விழுந்த பெண் கைது!!

சிங்கப்பூர்: செந்தோசா கடலில் விழுந்த பெண்ணை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஜூன் 29-ஆம் தேதி நடந்ததாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது .

இது தொடர்பான வீடியோவை ஒருவர் டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வீடியோவில், கடலோர காவல்படை அதிகாரிகள் அவரை காப்பாற்றும் போது, ​​​​அந்த பெண் பாதுகாப்பு மிதவையை கெட்டியாக பிடித்திருப்பதைக் காணலாம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களும் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர் நலன் மீது அக்கறை தெரிவித்து வருகின்றனர்.

ஜூன் 29 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனத்திடம் காவல்துறை தெரிவித்தனர்.

31 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக மனநல (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.